Categories: இந்தியா

நாக்பூரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயம்: 4 பேர் கைது

Published by
Castro Murugan

நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் தாக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள பர்சிங்கி என்னும் இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த நபர் வீட்டுக்கு வாங்கி வந்த ஆட்டிறைச்சியை மாவட்டிறைச்சி என்று தவறாக கருதி 6, 7 பேர் கொண்ட கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் ரத்த காயமடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

தாக்குதல் குறித்து 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரியானாவில் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்று கூறி ஓடும் ரயிலில் ஜூனைட் என்ற இளைஞர் அடித்து கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மராட்டியத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. பசு பாதுகாப்பு என்ற போர்வையில் தாக்குதல் நடத்துபவர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளபோதிலும் இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Published by
Castro Murugan
Tags: india

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

49 mins ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

12 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

16 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

17 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

17 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

17 hours ago