3ஆம் பாலினத்தவர்களுக்கும் எந்தவித பாகுபாடு இல்லாமல் வேலை வழங்கபடுவதற்கு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஷானாவி பொன்னுசாமி எனும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டர்ஸ் எனப்படும் விமான பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பித்து வருகிறார்.
ஆனால், அவர் அந்த வேலை விண்ணப்பத்தை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளனர். இது குறித்து, சட்ட ரீதியாகவும், உச்சநீதிமன்றத்தில் போராடி வருகிறார் ஷானாவி பொன்னுசாமி.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது மிகவும் சென்சிட்டிவான வழக்கு என கூறியிருந்தார். இது குறித்து அரசுதரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதில்பதிலளித்த , அரசு வழக்கறிஞர், 3ஆம் பாலினத்தவர்களின் பாதுகாப்பு, அடிப்படை விஷயங்கள் மட்டுமே சட்டத்தில் இருப்பதை குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஆண் , பெண் போல 3ஆம் பாலினத்தவர்களுக்கும் எந்தவித பாகுபாடு இல்லாமல் வேலை வழங்கபடுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதன் அறிக்கையை மத்திய அரசு 3மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…