மகாராஷ்டிராவில் 363 சிறைக்கைதிகளுக்கு கொரோனா வைரஸ் .!

Default Image

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றால் 363 சிறைக்கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

மகாராஷ்டிராவில்  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மகாராஷ்டிரா மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள், ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இதுவரை மராட்டியாவில் 1,80,298 – பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு சிறைக்கைதிகளையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம், இன்று காலை மகாராஷ்டிராவில் மாநிலத்தில் உள்ள 363 சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது, மேலும் 102 சிறை அலுவலர்களுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது 255 கைதிகள் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து வீடு திரும்பினர், மேலும் 82 சிறை அலுவலர்கலும் கொரோனா வைரஸ் கோரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

மும்பையில்  181 சிறைக்கைதிகள்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மும்பை சிறை அலுவலகர் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்