கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு பாதிப்பு.! 122 பேர் உயிரிழப்பு.!

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் குறையாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 74,292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,415 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர் இதுவரை 24,420 வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் தற்போது கொரோனா வார்டில் 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மத்திய சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts