350 வயதில் மனிதர்…வாக்காளர் பட்டியலில் பெயர்…ஆந்திராவில் அதிசயம்…!!

Default Image
ஆந்திராவில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒருவரது வயது 350 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மனிதனுக்கு சராசரியாக ஆயுள் 60 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இன்னும் சிலர் 80 ஆண்டுகள் வரை வாழ்வார்கள் என்று கூறுகின்றனர். உலகில் 120 வயது வரை வாழும் மனிதர்கள் ஒரு சிலர் காணப்படுகிறார்கள்.இந்த நிலையில்  ஒருவர் 350 வரை உயிருடன் இருக்க முடியுமா…? என்ற கேள்வி எழுந்துள்ளது.  சமீபத்தில் ஆந்திராவில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒருவரின் வயது 350 ஆக உள்ளது.
ஆந்திர மாநில அரசின் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் விவரம் வெளியானது. அதில் வாக்காளர் ஒருவரின் வயது 350 என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அவரது வயது 350 இல்லை என்றும், அது தவறாக குறிப்பிடப்பட்ட தகவல் எனக்கூறப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் பணியில் மென்பொருள் பொறியாளர் லோகேஸ்வரர் ரெட்டி தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் வாக்காளர் பட்டியலில் 15 சதவீத வாக்காளர்களின் விவரங்கள் தவறானவை என தெரியவந்துள்ளது.அதாவது போலி விவரங்கள், முறைகேடான தகவல்கள்,  திரும்ப  திரும்ப ஒருவரின் பெயர்கள் இடம்பெற்றது என தவறுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக ஆந்திராவில் 3.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் அவர்களில் 52.67 லட்ச வாக்காளர்களின் விவரங்களில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்