ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய 35 இந்தியர்கள்.! எல்லையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விமானம்,

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விமானம், ரயில், பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களையும் தனிமைப்படுத்தி வைக்கமாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்த 35 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். இவர்களை இந்தோ – திபெத் எல்லையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர்.