ராஜீவ் காந்தியின் 32வது நினைவுநாள்..! கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அஞ்சலி..!

RajivGandhideathanniversary

ராஜீவ் காந்தியின் 32வது நினைவு நாளை முன்னிட்டு கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள கேபிசிசி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவகுமார் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, பயங்கரவாதத்தால் பாஜகவை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என்று பாஜக தொடர்ந்து கூறுகிறது. ஆனால் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற பல காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாத தாக்குதலில் இறந்தனர் என்று கூறினார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள வீரபூமியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்