2-வது சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்த 323 இந்தியர்கள் .!

Published by
Dinasuvadu desk
  • நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வுகான் நகரில் இருந்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தனர்.
  • இன்று காலை  2-வது சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் டெல்லி வந்தனர்.

முதல் விமானம்:

நேற்று டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வுகான் நகரில் இருந்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தனர். அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

இரண்டாவது விமானம்:

இந்நிலையில் நேற்று பிற்பகல் சீனாவின் வுகான் பகுதியில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர இரண்டாவது சிறப்பு விமானம் சென்றது.இதையெடுத்து 323 இந்தியர்களுடன் அந்த சிறப்பு விமானம் இன்று காலை 9.45 மணிக்கு டெல்லி வந்தது. இவர்களில் 7 பேர் மாலத்தீவை சேர்ந்தவர்கள்இவர்கள் அனைவருக்கும் பரிசோதனைக்கு நடத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா:

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.

பலி எண்ணிக்கை:

இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

முதல் உயிரிழப்பு:

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதுவரை சீனாவில் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளனர். ஆனால் முதல் முறையாக சீனாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தது இதுவே முதல் முதல்முறையாகும்.இதனால் மொத்தமாக கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்து உள்ளது.

 

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

3 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

6 hours ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

7 hours ago

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

8 hours ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

8 hours ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

9 hours ago