Categories: இந்தியா

உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள் : முதல்முறையாக 32,000 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்

Published by
Castro Murugan

மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 32,000 புள்ளிகளை எட்டிப்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 9,900 புள்ளிகளை எட்டி உள்ளது.1999ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக ஜூன் மாதத்தில் பணவீக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தொடர்ந்து 4வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 13, காலை 9 மணி நிலவரம்) 189.99 புள்ளிகள் உயர்ந்து 31,994.81 புள்ளிகளாகவும், நிப்டி 56.50 புள்ளிகள் உயர்ந்து 9872 புள்ளிகளாகவும் இருந்தது.டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பு வெகுவாக உயர்ந்ததன் காரணமாக காலை 9.30 மணியளவில் பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டின.சென்செக்ஸ் 215.60 புள்ளிகள் உயர்ந்து 32,020.42 புள்ளிகள், நிப்டி 62.40 புள்ளிகள் உயர்ந்து 9878.50 புள்ளிகள் என்ற அளவையும் எட்டி உள்ளன. மின்துறை, உலோகம், வங்கி துறை, ஆட்டோ துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்துடனேயே காணப்படுவதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by
Castro Murugan
Tags: india

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago