உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள் : முதல்முறையாக 32,000 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்

Default Image

மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 32,000 புள்ளிகளை எட்டிப்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 9,900 புள்ளிகளை எட்டி உள்ளது.1999ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக ஜூன் மாதத்தில் பணவீக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தொடர்ந்து 4வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 13, காலை 9 மணி நிலவரம்) 189.99 புள்ளிகள் உயர்ந்து 31,994.81 புள்ளிகளாகவும், நிப்டி 56.50 புள்ளிகள் உயர்ந்து 9872 புள்ளிகளாகவும் இருந்தது.டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பு வெகுவாக உயர்ந்ததன் காரணமாக காலை 9.30 மணியளவில் பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டின.சென்செக்ஸ் 215.60 புள்ளிகள் உயர்ந்து 32,020.42 புள்ளிகள், நிப்டி 62.40 புள்ளிகள் உயர்ந்து 9878.50 புள்ளிகள் என்ற அளவையும் எட்டி உள்ளன. மின்துறை, உலோகம், வங்கி துறை, ஆட்டோ துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்துடனேயே காணப்படுவதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்