பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தங்கள் தொலைபேசிகளை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக போராடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா அவர்கள், பெங்களூரில் குறைந்தது 2,000 முதல் 3,000 பேர் தங்கள் தொலைபேசிகளை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் ஆர்.அசோகா, காணாமல் போனவர்களை கண்காணிக்குமாறு போலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவை கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, அங்கு முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…