மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை 15 வயது சிறுமி ஒருவர், சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் 2 கூட்டாளிகளுடன் வந்த 30 வயது நபர் தன்னை மிரட்டி, அதன் பின்பு சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு பின்பு அந்த இடத்திலேயே மயங்கி தூங்கிவிட்டாளாம். அதன் பின்பு இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
குற்றம் செய்தவர்கள் அரசியல் அதிகாரம் உள்ளவர்களாக இருந்ததால் ரயில்வே நிலையம் அருகிலிருந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இதுகுறித்து உல்லாஸ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த 30 வயது நபரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இவர் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவார் எனவும் காவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…