15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது…!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை 15 வயது சிறுமி ஒருவர், சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் 2 கூட்டாளிகளுடன் வந்த 30 வயது நபர் தன்னை மிரட்டி, அதன் பின்பு சுத்தியலால் தாக்கி பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். மேலும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு பின்பு அந்த இடத்திலேயே மயங்கி தூங்கிவிட்டாளாம். அதன் பின்பு இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
குற்றம் செய்தவர்கள் அரசியல் அதிகாரம் உள்ளவர்களாக இருந்ததால் ரயில்வே நிலையம் அருகிலிருந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இதுகுறித்து உல்லாஸ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த 30 வயது நபரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இவர் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவார் எனவும் காவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025