மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் 3 ஆண்டுகள் சிறை! அகமதாபாத்தில் அதிரடி!

Default Image

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இந்தியா முழுவதும் இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்த மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெக்ரா அவர்கள் கூறுகதையில், ‘வெளியில் செல்லும் போது, முகக்கவசம் அணியாமல் சென்றால், தொற்றுநோய் தடுப்பு பிரிவின் கீழ், 5,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.’ என்றும் கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்