நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில் 3 வீரர்கள் காயம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று அதிகாலை சுக்மா மாவட்டத்தில் உள்ள எல்மகுண்டா முகாம் அருகே நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில்ஹேமந்த் சவுத்ரி, காவலர் பசப்பா, லலித் பாக் ஆகிய மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.
3 வீரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், காயமடைந்த வீரர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக பஸ்தார் ஐஜி பி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
திடீர் தாக்குதல்:
இன்று காலை 6 மணியளவில் சிஆர்பிஎஃப் வீரர்களின் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாகவும், நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்திய உடனே ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர் என பஸ்தார் ஐஜி பி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)