3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published by
Venu

3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

தமிழகத்தில்  21 சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளன. இதில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்டது.

அதேபோல்  ஒப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் வழக்குகள் முடிவடைந்த நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் சூலூர் தொகுதியும் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்தார். இந்த 3 தொகுதிகளும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

இந்நிலையில்  அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனால் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரும் வழக்கை இன்று (மார்ச்  28-ஆம் தேதி) விசாரணை நடத்துவதாக  உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் தேர்தல் ஆணையம் தரப்பில்  தகவல் தெரிவித்தது. சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும் என்றும்  அவசர கதியில் நடத்த முடியாது என்றும்  தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.

பின்னர்  3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago