பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை வந்தடையும்.
சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த ஏற்கனவே ரஃபேல் போர் விமானங்களை வாங்கி விமானப் படையில் இணைக்க திட்டமிட்டிருந்தது. அதன்படி கடந்த 2016-ல் இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தப்படி 36ரஃபேல் ஜெட் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் இந்தியா வாங்கியுள்ளது.
அதன் முதல் கட்டமாக கடந்த ஜூலை 28-ம் தேதி 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவை அடைந்து செப்டம்பர் 10-ம் தேதி விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இன்று பிரான்சில் இருந்து இந்தியா புறப்பட்டு மாலையில் ஹரியானாவின் அம்பாலா விமான நிலையத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த 3 விமானங்களையும் மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிம்மரா விமானப்படையில் இணைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…