3 பேருக்கு கொரோனா வைரஸ் ! மாநில பேரிடராக அறிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன்

Published by
Dinasuvadu desk

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மாநில பேரிடராக அறிவிப்பு 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் பலி எண்ணிக்கை 426 ஆக அதிகரித்துள்ளது இதில் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.இந்த பிரச்னை உலக நாடுகளை நடுங்க வைத்திருக்கிறது .இந்நிலையில் சீனாவில் வுகான் மாகாணத்தில் மருத்துவம் படித்து வந்த இரு கேரள  மாணவர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு  தீவிர கண்காணிப்பில் இருக்கும் நிலையில் நேற்று சீனாவில் இருந்து திரும்பிய  மற்றொரு கேரள நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரளா முதலமைச்சர் பினராய் விஜயன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாநில பேரிடராக அறிவித்துள்ளார் .இது குறித்து கேரளா சுகாதாரத்துறை  அமைச்சர்  கே.கே.ஷைலாஜா கூறுகையில் ,வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சுமார் 2000 மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதகாவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் படி மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் .இவ்வாறு மாநில பேரிடராக அறிவிப்பதன் மூலம்  மாநில அரசு வேகமாக இயங்கும் நோய் பரவுவதை தடுக்க வழிவகை செய்யும்  என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார் .

கேரளாவுக்கு சீனா மற்றும் பிறைநாடுகளில் இருந்து  திரும்பிய எண்ணிக்கை 2,239 பேர் என்றும் இவர்களில் 2,155 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்னர் என்றும் இவர்களில் 84 பேர்  மாநிலத்தின் பல்வேறு மருத்துமனைகளில் தங்கவைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர் .பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 140 மாதிரிகளில்  46 மாதிரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் 3 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .

Published by
Dinasuvadu desk

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

8 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago