இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினர். அப்போது, இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதுவரை இந்தியாவில் 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி மருந்து பரிசோதனையில் உள்ளது. வரும் நாட்களில் தடுப்பூசிகளை வினியோகம் செய்வது அதிகரிக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளை வாங்கி பயன்படுத்தலாம். மீதமுள்ள 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு வினியோகம் செய்யும்.
இந்தியா ஒரே ஆண்டில் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகம் செய்திருக்கிறது. எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்புசி உற்பத்தி நிரந்தரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை தொடங்கியுள்ளோம் என தெரிவித்தார். மேலும், நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகள் குறித்து வதந்தி பரப்பவேண்டாம் என மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…