விரைவில் மேலும் 3 தடுப்பூசிகள் வரும் -பிரதமர் மோடி..!

Default Image
  • இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
  • இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன என மோடி தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம்  உரையாற்றினர். அப்போது, இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மூன்று தடுப்பூசிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதுவரை இந்தியாவில் 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி மருந்து பரிசோதனையில் உள்ளது. வரும் நாட்களில் தடுப்பூசிகளை வினியோகம் செய்வது அதிகரிக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளை வாங்கி பயன்படுத்தலாம். மீதமுள்ள 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு வினியோகம் செய்யும்.

இந்தியா ஒரே ஆண்டில் இரண்டு தடுப்பூசிகளை அறிமுகம் செய்திருக்கிறது. எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்புசி உற்பத்தி நிரந்தரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை தொடங்கியுள்ளோம் என தெரிவித்தார். மேலும், நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகள் குறித்து வதந்தி பரப்பவேண்டாம் என மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nagpur Violence -Sunita Williams LIVE
pm modi donald trump
sunita williams pm modi
premalatha vijayakanth edappadi palanisamy
BJP State President Annamalai say about Nellai Rtd Police murder
ADMK Former Minister Sellur Raju
chennai corporation - dog