உத்திரபிரதேசத்தில் கார் வாங்க 1.5 லட்சத்திற்கு குழந்தையை விற்ற பெற்றோர்.
உலகெங்கும் கொரோனா பரவி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பிணங்களை எறிக்க ஆங்காங்கே மக்கள் வரிசைகட்டி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்கவதற்கு தான் பெற்ற பிள்ளையை தொழிலதிபர் ஒருவரிடம் உத்திரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் விற்றதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குழந்தையின் தாய்வழி தாத்தா பாட்டி போலீஸ்காரர்களை அணுகி பெற்றோருக்கு எதிராக புகார் அளித்ததையடுத்து, புதிதாகப் பிறந்த 3 மாத குழந்தையை விற்றுவிட்டதாக வியாழக்கிழமை இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
குழந்தையின் தாத்தா பாட்டி பகிர்ந்து கொண்ட தகவல்களின்படி, 3 மாத குழந்தை குர்ஷாஹைகஞ்ச் நகரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நான்கு சக்கர வாகனத்திற்காக விற்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரை ஏற்ற போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் சீனாவிலும் அறங்கேறியுள்ளது, சீனாவின் ஜெஜியாங்கில் ஒரு நபர் சமீபத்தில் தனது இரண்டு வயது மகனை விற்றுள்ளார், பின்னர் அந்த பணத்தை வைத்து வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். தனது 2 வது மனைவியுடன் சண்டையிட்டு குழந்தை பராமரிப்பு சுமையால் பெற்ற மகனை விற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய…
இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து…
ரியாத் : AFC சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ…
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…