பணம் மற்றும் நகைக்காக 3 திருமணம் செய்த பெண்…! காவல்நிலையத்தில் புகாரளித்த இராணுவவீரர்..!

Default Image

பணம் மற்றும் நகைக்காக 3 திருமணம் செய்த பெண்ணை காவல்நிலையத்தில் புகாரளித்த இராணுவவீரர். 

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண், ராணுவத்தில் பணியாற்றும் பிரசாத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தான் பணியாற்றும் லக்னோவிற்கு ரேணுகாவை அனைத்து சென்றுள்ளார். அங்கு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தனது விசாகப்பட்டினம் மாநகராட்சியில் வேலை கிடைத்திருப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். அதன்பின் லக்னோவில் இருந்து, அடிக்கடி தொலைபேசி மூலம் ரேணுகாவிடம் பேசி வந்துள்ளார் பிரசாத். இதனையடுத்து, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, ரூ.45 லட்சம் வரை பிரசாத்திடம் பணம் வாங்கியுள்ளார். இறுதியாக தனது தாயார் இறந்துவிட்டதாக கூறிஉள்ளார்.

இதனையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, விசாகப்பட்டினம் வந்த பிரசாத்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதன்பின் தான் அவருக்கு ரேணுகாவிடம் ஏமாந்தது தெரியவந்தது. இந்நிலையில், இதுகுறித்து ராணுவவீரர் பிரசாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ரேணுகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் அவர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்தது தெரியவந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court
Donald Trump Pakistanis