டெல்லி : இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் இன்று காலை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காலையில் பெய்த மழை காரணமாக விபத்து நடந்ததாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் பீம்களும் இடிந்து விழுந்ததால், டெர்மினலின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியதாகவும், அதில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது.
தற்பொழுது, மீட்கப்பட்ட மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, விபத்து காரணமாக முதல் முனையத்தில் விமான புறப்பாடு மட்டும் மதியம் 2 மணிவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் கூறியுள்ளது.
சென்னை : கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்…
சென்னை : தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும் கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல வரலாற்று காரணங்கள் பற்றி இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. தனது அரசியல் பயணத்தின் மிக…
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கட்சியின் முதல் மாநாடு…
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை…
விழுப்புரம் : விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இது கட்சியின் முதல் மாநாடு…