உத்திரபிரதேசத்தில் செல்பி எடுக்கும்போது படகு கவிழ்ந்து மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியோரியா மாவட்டத்தில் மகாதேவ் தால் குளம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த குளத்தில் 8 முதல் 12 வயதுடைய 7 சிறுமிகள் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதில் படகு திடீரென கவிழ்ந்ததில் 7 பேரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். இதில் 4 சிறுமிகளும், படகோட்டியும் நீந்தி கரையேறி உள்ளனர்.
3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கரையேறிய 4 சிறுமிகளில் ஒருவரின் நிலைமை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையில் நேரடியாக களத்திற்கு வந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டு அசுதோஷ் நிரஞ்சன், இறந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…