புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் 3 நிறுவனங்கள் தேர்வு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு போட்டிகளில் இருந்த 7 நிறுவனங்களில் மூன்று ஆன்லைன் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பொதுப்பணித் துறை “சிபிடபிள்யூடி” தெரிவித்துள்ளது.
அவை, லார்சன் அண்ட் டூப்ரோ , ஷபூர்ஜி பல்லோன்ஜி கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகியவை புதிய நாடாளுமன்ற வளாகத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற ஆன்லைன் நிதி ஏலங்களை சமர்ப்பிக்க தகுதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் இங்கு பாராளுமன்ற மாளிகை மாநிலத்தின் 118 வது திட்டத்தில் கட்டப்படும். இது மத்திய Vista Re-Development திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது.
ஆகஸ்ட் -10ம் தேதி CPWD -யின் அறிக்கையின் படி மொத்தம் ஏழு முன் தகுதி டெண்டர்கள் பெறப்பட்டது அவை ஜூலை 14 ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் தகுதிக்கான ஆரம்ப நிபந்தனைகளின் படி அவை ஆராயப்பட்டது. ஆவணங்களின் ஆய்வின் அடிப்படையில், நிதி ஏலங்களை சமர்ப்பிக்கக்கூடிய மூன்று நிறுவனங்களை மத்திய நிறுவனம் தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில் பாராளுமன்றத்தின் புதிய கட்டிடம் இரண்டு மாடி கட்டடமாக இருக்கும். மேலும், இந்தியா சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 2022 -ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் தயாராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)