ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலுக்கு 3 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் புல்வாமா சவுக் பகுதியில் பாதுகாப்புப் படையின் வாகனத்தை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால் வெடிகுண்டு சாலையோரத்தில் விழுந்து வெடித்துள்ளது.
இதனால் அங்கிருந்த பொதுமக்களில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதன் பின்னர் உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…