பீகாரின் ஹாஜிபூர் நகரில் வைத்து மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் மீது மை வீசியதற்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை, முன்னாள் மத்திய அமைச்சரான மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் சகோதரரும், ஜன்சக்தி கட்சி தலைவருமாகிய பசுபதி குமார் பராஸ் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பீகாரில் உள்ள ஹாஜிப்பூருக்கு பசுபதி குமார் அவர்கள் நேற்று முன்தினம் காரில் வந்த பொழுது, பசுபதி குமார் மீது ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் ஆதரவாளரான பெண் ஒருவர் கருப்பு மையை தெளித்துள்ளார்.
இந்நிலையில், அவரது சட்டையில் மை கறை படிந்தததால், அவர் தனது சட்டையை மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் மீது மை வீசியது தொடர்பாக 11 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்பொழுது 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீன்குமார், அணில் பஸ்வான் மற்றும் திரிபுவன் பஸ்வான் ஆகியோர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மற்றொரு குற்றவாளி ஆகிய லட்சுமி தேவி எனும் பெண்மணி தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…