கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் மது பிரியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர்.
கொரோனா பாதிப்பால் 40 நாட்களாக மூடப்பட்ட மதுக்கடை நேற்று டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் திறக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் நேற்று மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால், மது பிரியர்கள் சமூக விலகலை கடைபிடித்து மதுக்கடைக்கு வெளியில் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நின்று மது வாங்கிச் சென்றனர்.
நேற்று மட்டும் கர்நாடக மாநிலத்தில் ரூ. 45 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது. நேற்று மட்டும் 3.90 லட்சம் லிட்டர் பீர் மற்றும் 8.50 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனையானது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…