3.01 மீட்டர் தலைமுடிமுடி நீளம் கொண்ட அகன்க்ஷா இந்தியாவின் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் அழகு நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் என கூறப்படுகிறது. பெண்கள் தங்கள் தலைமுடியை வளர்க்க விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் பிற வகை பொருட்களைப் பயன்படுத்திய பிறகும், அவர்களின் பிரச்சனை அப்படியே உள்ளது. ஆனால் இந்தியாவில் வசிக்கும் அகன்க்ஷாவின் தலைமுடிமுடியின் நீளம் 3.01 மீட்டராகும். அகன்க்ஷா இந்தியாவின் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரது இந்த சாதனையின் காரணமாக அவரது பெயர் லிம்கா புத்தகத்தில் 2020-2022 இல் சேர்க்கப்பட்டது. லிம்கா புத்தகத்தின் 30-வது பக்கத்தில் அகன்க்ஷா யாதவின் பெயர் மிக நீண்ட முடி கொண்ட பெண் என பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
நீளமான கூந்தலுக்கு பெயர் பெற்ற அகன்க்ஷா யாதவ், மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர். அகன்க்ஷா தனது நீண்ட கூந்தலுக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை இதுவரை சொன்னது இல்லை. அகன்க்ஷா தனது தலைமுடியைக் கழுவுவதற்கும், பராமரிப்பதற்கும் ஒரு நாளைக்கு 20 நிமிடங்களுக்கு மேல் எடுக்கவில்லை என்று மட்டுமே கூறுகிறார்.
தலைமுடியை எப்போதாவது வெட்டி உள்ளீர்களா..? என்று கேட்டபோது, ’இடுப்பில் இருந்து தரையில் தொங்கும் முடியை ஒரு முறை நான் வெட்டினேன் என்று அகன்க்ஷா கூறினார்.
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
துபாய் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…