3.01 மீட்டர் தலைமுடிமுடி நீளம் கொண்ட அகன்க்ஷா இந்தியாவின் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பெண்ணின் அழகு நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தல் என கூறப்படுகிறது. பெண்கள் தங்கள் தலைமுடியை வளர்க்க விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் பிற வகை பொருட்களைப் பயன்படுத்திய பிறகும், அவர்களின் பிரச்சனை அப்படியே உள்ளது. ஆனால் இந்தியாவில் வசிக்கும் அகன்க்ஷாவின் தலைமுடிமுடியின் நீளம் 3.01 மீட்டராகும். அகன்க்ஷா இந்தியாவின் மிக நீளமான முடி கொண்ட பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரது இந்த சாதனையின் காரணமாக அவரது பெயர் லிம்கா புத்தகத்தில் 2020-2022 இல் சேர்க்கப்பட்டது. லிம்கா புத்தகத்தின் 30-வது பக்கத்தில் அகன்க்ஷா யாதவின் பெயர் மிக நீண்ட முடி கொண்ட பெண் என பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
நீளமான கூந்தலுக்கு பெயர் பெற்ற அகன்க்ஷா யாதவ், மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்தவர். அகன்க்ஷா தனது நீண்ட கூந்தலுக்குப் பின்னால் உள்ள ரகசியத்தை இதுவரை சொன்னது இல்லை. அகன்க்ஷா தனது தலைமுடியைக் கழுவுவதற்கும், பராமரிப்பதற்கும் ஒரு நாளைக்கு 20 நிமிடங்களுக்கு மேல் எடுக்கவில்லை என்று மட்டுமே கூறுகிறார்.
தலைமுடியை எப்போதாவது வெட்டி உள்ளீர்களா..? என்று கேட்டபோது, ’இடுப்பில் இருந்து தரையில் தொங்கும் முடியை ஒரு முறை நான் வெட்டினேன் என்று அகன்க்ஷா கூறினார்.
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…