3ம் கட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்; பிரதமர் நரேந்திர மோடி…!

Default Image

டெல்லி; மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்றாம் கட்டமாகப் பணிகள் முடிக்கப்பட்டு  பாதையில் ரயில் சேவையை நாளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஏற்கெனவே 2 கட்டப் பணிகள் முடிக்கப்பட்டுப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்கா முதல் கால்காஜி மந்திர் வரை பணிகள் முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நாளை தொடங்கிவைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. பயணிகள் பாதுகாப்பே முக்கியம் என்றும், அழைப்பு அனுப்பப்படாதது பற்றிக் கவலையில்லை என்றும் முதலமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது…

sources; dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்