இதுவரை 27 மாநிலங்களுக்கு ரூ.9,879.61 கோடி மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன.கடந்த அக்டோபர் மாதம் இந்தத் திட்டத்தை தற்சார்பு இந்தியா நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
கொரோனா பெருந்தொற்றால் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநிலங்களின் மூலதன செலவினங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்கு மாநிலங்களிடையே சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.இதுவரை 27 மாநிலங்களுக்கு ரூ.9,879.61 கோடி மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதுஇந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல் தவணையாக ரூ. 4,939.81 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன செலவினங்களுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…