#Breaking:உஷார்…இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 2,685 பேருக்கு புதிதாக கொரோனா;25 பேர் பலி!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,822 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 2,685 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,55,749 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆக பதிவாகியுள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,611 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,070 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,13,440 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17,698 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,93,31,57,352 கோடி பேருக்கு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 2,28,823 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்