கோவா அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாவிட்டாலும் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 26 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தற்போது கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு மாநில அரசுகளும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
இதனையடுத்து கோவாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதேபோல ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கோவாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோவாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிகாலை 2 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த 26 கொரோனா நோயாளிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அம்மாநிலத்தில் சுகாதாரத்துறை அதிகாரி பேசுகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் இருந்து காலை 6 மணி வரையில் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது உண்மை எனவும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றாலும், சரியான நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உரிய இடங்களுக்கு போய் சேருவதில் ஏற்படும் பிரச்சினை காரணமாக தான் இந்த உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…