Categories: இந்தியா

25 பெண் ஊர்க்காவல் படையினருக்கு 2 மூத்த அதிகாரிகள் பாலியல் தொல்லை…!!

Published by
Dinasuvadu desk
குஜராத்தில் 2 மூத்த அதிகாரிகள் மீது 25 பெண் ஊர்க்காவல் படையினர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
குஜராத்தில் சூரத் நகரில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 25 பெண்கள் நகர காவல் ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளித்துள்ளனர்.  பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உள்ளூர் புகார் குழு அவர்களது புகாரை விசாரித்து வருகிறது.
அதில், 2 மூத்த அதிகாரிகள் மீது அவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ளனர்.  4 பக்கம் கொண்ட புகாரில், மனதளவில், உடலளவில், பாலியல் ரீதியில் இருவரும் பெண்களிடம் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளனர்.
விருப்பப்பட்ட பணியிடங்களுக்கு செல்ல அவர்கள் பணம் கேட்டுள்ளனர்.  பணம் தரவில்லை என்றால், தொலைவில் உள்ள இடங்களுக்கு அனுப்பப்பட்டு துன்புறுத்தல் தரப்பட்டு உள்ளது.அந்த 2 பேரில் ஒருவர், புகார் அளித்த பெண்களின் சீருடையினை சரி செய்வது போன்று தவறான முறையில் தொட்டுள்ளார்.
பெண்களில் சிலர் அதிகாரிகளின் வீட்டு பணியாளாகவும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி முதல் மந்திரி விஜய் ரூபானிக்கும் புகார் அளித்துள்ளனர்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

18 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

41 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago