ரிசர்வ் வங்கி அறிவிப்பு..! இந்த வங்கி வசதி இன்று முதல் 24 மணி நேரம் கிடைக்கும்..!

Published by
murugan

நீங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இன்று முதல் 24 மணிநேரமும் (ஆர்.டி.ஜி.எஸ்) வசதியை வழங்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த சேவை டிசம்பர் இன்று இரவு மதியம் 12:30 மணி முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த அம்சத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

வங்கிகளில் அதிக மதிப்பிலான பணம் பரிவர்த்தனைக்கு ஆர்டிஜிஎஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வங்கி வேலை நாள்களில் குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே இந்த பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். தற்போது, வங்கிகளில் RTGS  பரிவர்த்தனை ​​2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளைத் தவிர மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்டிஜிஎஸ் உதவியுடன் நிதி மாற்றப்படுகிறது.

இந்நிலையில் நிதிக் கொள்கையை மறு சீராய்வு அறிக்கையில், ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனையை வங்கி வாடிக்கையாளர் 24 மணி நேரமும், 7 நாட்களும் மேற்கொள்ளும் வசதி செயல்பாட்டுக்கு வரும் என ரிசர்வ் வாங்கி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், கொரோனா காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால், ஆர்.டி.ஜி.எஸ் நேரத்தை நீட்டிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருந்தது.

அதன்படி, ஆர்டிஜிஎஸ் வசதியை 24 * 7 மணி நேரம் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை முறை. இதன் மூலம் பணம் மிகக் குறுகிய காலத்தில் மாற்றப்படுகிறது. RTGS மூலம் பெரிய தொகையை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. இதன் கீழ் குறைந்தபட்சம் ரூ .2 லட்சம் அனுப்பலாம். அதிகபட்ச தொகையை 10 லட்சம் ரூபாய் அனுப்புவதற்கான வரம்பு உள்ளது.

ஆர்டிஜிஎஸ் மூலம் 2 லட்சத்திலிருந்து 5 லட்சத்திற்கு நிதி மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அதிகபட்சமாக ரூ.4.5 கட்டணமும் , 5 லட்சத்துக்கும் அதிகமான நிதி பரிமாற்றத்திற்கு வங்கி அதிகபட்சமாக ரூ.49.5 கட்டணம் வசூல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

RTGS  கடந்த 26 மார்ச் 2004 அன்று தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் 4 வங்கிகள் மட்டுமே இந்த சேவையுடன் பயன்படுத்தினர். ஆனால் இப்போது நாட்டில் சுமார் 237 வங்கிகள் இந்த முறையின் மூலம் தினசரி ரூ.4.17 லட்சம் கோடி பரிவர்த்தனைகளை செய்கின்றனர். நவம்பரில், ஆர்டிஜிஎஸ்ஸிலிருந்து சராசரி பரிவர்த்தனை தொகை ரூ.57.96 லட்சம் ஆகும்.

Published by
murugan

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

6 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

7 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

8 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

8 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

9 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

11 hours ago