#24×7: உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி!

Default Image

டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி.

டெல்லியில், 4 மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள உணவகங்கள், பார்கள் மற்றும் விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. இந்த அனுமதி பெற ஹோட்டல் உரிமையாளர்கள், அடிப்படை கட்டணத்தை செலுத்தி, உரிமம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நட்சத்திர ஓட்டல்களில் உள்ள உணவகங்கள் அதிகாலை 2 மணி வரை செயல்படலாம், மீதமுள்ளவை நள்ளிரவு 1 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். புத்தாண்டு பரிசாக அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட உரிம விதிகள் தளர்த்தப்பட்டதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு தில்லி குடிமை அமைப்பாலும், ஒன்பது ஆண்டுகளுக்கு தில்லி காவல்துறை மற்றும் தில்லி தீயணைப்புத் துறையாலும் உரிமங்கள் வழங்கப்படும். உரிமம் வழங்கும் செயல்முறையை எளிதாக்குவதன் ஒரு பகுதியாக, 28 ஆவணங்கள் இனி தேவையில்லை என்றும், விண்ணப்பதாரர்கள் 49 நாட்களுக்குள் உரிமங்களைப் பெறுவார்கள் என்றும் அதிகாரிகள் முடிவு செய்து தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்