இலங்கையிலிருந்து கனடாவிற்கு செல்வதற்காக கள்ளப்படகின் மூலமாக தூத்துக்குடி வழியே வந்து மதுரையில் தங்கியிருந்த இரண்டு சிங்களர்கள் உட்பட 23 இலங்கையை சேர்ந்த நபர்களும், ஏஜன்ட் ஒருவரும் என 24 பேர் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை கப்பலூரில் வீடு எடுத்து சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்தவர்கள் கடந்த பத்து நாட்கள் தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது அவர்களை கனடாவிற்கு அனுப்புவதற்காக அசோக்குமார் என்பவர் பணம் பெற்றுக்கொண்டு மதுரை கப்பலூரில் தங்க வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட அசோக்குமார் என்பவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், இந்தியாவிற்குள் தங்கியிருந்த 23 பேர் மற்றும் ஏஜென்ட் ஒருவர் உட்பட 24 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், கனடா நாட்டில் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே அங்கு இருக்கக்கூடிய இலங்கை தமிழர்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருவதால் அவர்களிடம் வேலை வாங்கி தருவதாக அசோக்கமார் என்பவர் இவர்களை தொடர்புகொண்டு இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு இவர்கள் 23 பேரையும் சட்டவிரோதமாக அழைத்து மதுரையில் தங்கவைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்த சில போலி ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அசோக் குமாரையும் போலீசார் தேடி வருகின்றனராம்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…