பெண்களின் பாதுகாப்புக்கு 24 மணிநேர உதவி எண்..!-மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி துவக்கம்..!

Published by
Sharmi

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு 24 மணி நேர உதவி எண்ணை தேசிய மகளிர் ஆணையம் செயல்படுத்தியுள்ளது. 

தேசிய மகளிர் ஆணையம் பெண்களின் நலனை வலுப்படுத்தும் விதமாக 7827170170 என்ற 24 மணி நேர உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி சுபின் ராணி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களுக்கு தேவையான உதவியை பெறுவதற்கு இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காவல்துறை, மருத்துவமனைகள், மாவட்ட சட்டச் சேவை ஆணையகம், உளவியல் சேவைகள் ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் அவர்களால் தொடர்பு கொள்ள முடியும்.

மேலும் இதனை துவங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளதாவது, இந்த மின்னணு உதவி எண் பெண்கள் பாதிக்கப்படும்பொழுது அரசு ஆதரவளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறினார்.  பெருந்தொற்று காலத்தில் தேசிய மகளிர் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!  

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

8 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

31 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

52 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

55 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago