232 அடி நீளம் 195 அடி அகலம் மொத்த பரப்பளவு 4,000 சதுர அடி.! இந்தியா வரும் ட்ரம்பின் வெறித்தனமான விமானம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இந்தியா வரும் அமெரிக்க அதிபரின் ஏர்போர்ஸ் ஒன் என்ற விமானம் அதிநவீன வசதிகளுடன் அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக அவரது மனைவி மெலானியா டிரம்புடன் வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்த நிலையில் இவர்கள் ஏர்போர்ஸ் ஒன் என்ற விமான மூலம் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வரும் ட்ரம்பின் விமானம் இது அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாகும். இது காரணமாகவே ட்ரம்பின் விமானம் பறக்கும் வெள்ளை மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏர்போர்ஸ் ஒன் விமானம் 232 அடி நீளமும் 195 அடி அகலமும் கொண்டது. பின்னர் 3 தளங்களைக் கொண்ட இந்த விமானத்தின் மொத்த பரப்பளவு 4,000 சதுர அடியாகும். விமானத்தின் உட்பகுதியானது 5 நட்சத்திர உணவகத்துக்கு ஈடாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானத்துக்குள் அதிபர் தங்குவதற்காக சகல வசதிகளைக் கொண்ட பிரத்யேக அறை, அதிபருடன் வரும் உயரதிகாரிகள் தங்குவதற்கென தனித்தனி அறைகள், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவக் குழுவினர் அடங்கிய மருத்துவமனை, செய்தியாளர் சந்திப்பு அறை, கருத்தரங்க அறை ஆகியவை உள்ளன. அதேபோல், ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவு சமைக்கும் வசதிகள் கொண்ட சமையற்கூடமும் அமைந்துள்ளது. மேலும் விமானத்தில் உள்ள அனைத்து ஜன்னல்களும், பீரங்கி குண்டுகளால் கூட துளைக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், விமானத்தின் அடிப்பகுதியானது அணு குண்டு தாக்குதலையும் தாங்கும் கட்ட மைப்பைக் கொண்டது. அதுமட்டுமின்றி, விமானம் முழுவதிலும் நவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து விமானத்தை தாக்க வரும் ஏவுகணைகளை குழப்பமடைய செய்து திசை மாற்றி விடக்கூடிய வகையில் இந்த ரேடார்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், தேவை ஏற்படும்போது ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தவும் இந்த விமானத்தால் முடியும். மேலும் பறந்து கொண்டிருக்கும் போதே இந்த விமானத்தில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும். எந்த நேரமும் வெள்ளை மாளிகையை தொலைபேசி மூலமாகவும், காணொலி மூலமாகவும் தொடர்பு கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. அதனால் 85 தொலைபேசிகளும், 20 அதி நவீன தொலைக்காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

43 minutes ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

1 hour ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

2 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

3 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

4 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

5 hours ago