தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.
தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் நீதிமன்றம். தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகக் கூறி பாஜக நிர்வாகி பொதுநல வழக்கு தொடுத்திருந்த நிலையில், அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில், உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்த சமயத்தில், தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது எனவும் ராஜஸ்தானின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்திருந்தார்.
மேலும் கூறுகையில், ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. தாஜ்மஹாலில் ஏன் பல அறைகள் பூட்டப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல அறைகள் அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளன, கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே, தாஜ்மஹாலில் இந்து சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பூட்டியுள்ள 22 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க நிர்வாகி டாக்டர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…