கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை புறக்கணித்த 20,000 மாணவர்கள்..!

Published by
murugan

கர்நாடகா மாநிலத்தில் நேற்று தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 20,994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. அதே சமயம் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகளும் பல இடங்களில் வெளிவருகின்றன. கர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சையில் அனைவரும் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், நேற்று கர்நாடகா மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கின. 10ஆம் வகுப்பு இறுதித் தேர்வு ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த தேர்வை எழுத 8.74 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு ஆஜராகினர். ஆனால் 20,994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஹிஜாப் தடை காரணமாக முஸ்லிம் மாணவிகள் பலர் தேர்வுக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதில் எத்தனை பேர் முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவில்லை.

ஹிஜாப் மற்றும் ஆடை கட்டுப்பாடு தொடர்பான விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். பெண்கள் ஹிஜாப் அணியாமல் தேர்வெழுத வேண்டும் என கர்நாடக உள்துறை அமைச்சர்  எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்! 

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

1 hour ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

2 hours ago

இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? அமைதிக்காக பரிந்துரை செய்த PWA!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…

2 hours ago

மும்பை இந்தியன்ஸ் டீமில் ரோஹித் சர்மா இல்லையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…

2 hours ago

MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!

மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…

3 hours ago

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…

4 hours ago