வன்கொடுமை செய்பவர்களுக்கு 21 நாட்களில் தூக்கு .! புதிய சட்ட மசோதா ஒப்புதல்.!

Published by
murugan
  • பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்க  ஒரு புதிய சட்ட மசோதாவை ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார்.
  • இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக பல நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசார் கைது என்கவுண்டர் செய்தனர்.இந்நிலையில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்களை உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்ற வகையில் ஒரு புதிய சட்ட மசோதாவை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டபட்டவரின் மீதான வழக்கு ஒரு வாரத்திற்குள் விசாரிக்கப்படும் .விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாற்றப்பட்டவருக்கு 21 நாள்களில் தூக்கு தண்டனை வழங்க புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது.சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.மேலும் பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு எந்த காவல் நிலையத்திலும்  வேண்டுமெனாலும் புகார் கொடுக்கலாம் என்ற ZERO FIR உள்ளிட்டவை இந்த மசோதாவில் உள்ளது.

Published by
murugan

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

11 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

11 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

12 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

12 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

13 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

15 hours ago