வன்கொடுமை செய்பவர்களுக்கு 21 நாட்களில் தூக்கு .! புதிய சட்ட மசோதா ஒப்புதல்.!

Published by
murugan
  • பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்க  ஒரு புதிய சட்ட மசோதாவை ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார்.
  • இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக பல நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசார் கைது என்கவுண்டர் செய்தனர்.இந்நிலையில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்களை உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்ற வகையில் ஒரு புதிய சட்ட மசோதாவை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டபட்டவரின் மீதான வழக்கு ஒரு வாரத்திற்குள் விசாரிக்கப்படும் .விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாற்றப்பட்டவருக்கு 21 நாள்களில் தூக்கு தண்டனை வழங்க புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது.சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.மேலும் பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு எந்த காவல் நிலையத்திலும்  வேண்டுமெனாலும் புகார் கொடுக்கலாம் என்ற ZERO FIR உள்ளிட்டவை இந்த மசோதாவில் உள்ளது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago