முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான ப .சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ ,அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து .சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முயற்சித்தனர். ஆனால் சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தனர். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஆனால் அதே விவரத்தில் அமலாக்கத் துறையும் கைது செய்து இருந்ததால் அவர் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது .அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.மேலும் அந்த ஜாமீனில் அவருக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.வழக்கு தொடர்பாக அறிக்கை மற்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இதன் பின்பு சிதம்பரம் சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த நிலையில் வெளியே வந்தார்.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…