75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் விகாஷ் கிருஷன் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது.இன்றைய போட்டியில் குத்துச்சண்டையில் மேரி கோம் தங்கம் வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து ஆண்களுக்கான 49 கிலோ குத்துச்சண்டை போட்டியில் அமித் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து 52 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி தங்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். அவர் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பதக்கம் வென்றார்.குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிர் 62 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றார்.ஆண்கள் 125 கிலோ பிரிவு ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுமித் தங்கப்பதக்கம் வென்றார். மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.மகளிர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.75 கிலோ குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் தங்கப்பதக்கம் வென்றார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிசில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் மற்றும் சனில் சங்கர் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் விகாஷ் கிருஷன் தங்கப் பதக்கம் வென்றார்.இன்று ஒரே நாளில் 8 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, 25 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலத்துடன், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…