75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் விகாஷ் கிருஷன் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது.இன்றைய போட்டியில் குத்துச்சண்டையில் மேரி கோம் தங்கம் வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து ஆண்களுக்கான 49 கிலோ குத்துச்சண்டை போட்டியில் அமித் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து 52 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி தங்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். அவர் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பதக்கம் வென்றார்.குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிர் 62 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றார்.ஆண்கள் 125 கிலோ பிரிவு ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுமித் தங்கப்பதக்கம் வென்றார். மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.மகளிர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.75 கிலோ குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் தங்கப்பதக்கம் வென்றார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிசில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் மற்றும் சனில் சங்கர் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் விகாஷ் கிருஷன் தங்கப் பதக்கம் வென்றார்.இன்று ஒரே நாளில் 8 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, 25 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலத்துடன், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…