ஹரியானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார்.
ஹரியானாவின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா உரையுடன் நேற்று தொடங்கியது. ஹரியானா சட்டப்பேரவையில் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா தனது உரையை வாசித்தார். முதலில் தியாகிகளுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு அனைவரையும் கவர்னர் வரவேற்றார். ஆளுநர் தனது உரையில் ராமர் கோயில் குறித்து குறிப்பிட்டார். பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது என்றார்.
சுகாதார அமைப்பின் உதவியுடன் கொரோனா போன்ற நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம் என தெரிவித்தார். மேலும், ஹரியானா மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க மாநில அரசு முன்மொழிந்துள்ளது. பிவானி, ஜிந்த், மகேந்திரகர், கைதால், சிர்சா மற்றும் யமுனாநகர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக ஆளுநர் தத்தாத்ரேயா தெரிவித்தார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…