இறுதிச் சடங்கிற்கு 20 பேருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால், 1000 பேர் ஒரு மது கடையில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள் என எம்.பி. சஞ்சய் ராவத் பதிவிட்டு உள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் 40 நாள்களுக்கு பிறகு மதுபானக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, டெல்லி, உள்பட பல மாநிலங்களில் திறக்கப்பட்டன. இதனால், மது பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்கிச் செல்கின்றனர். ஆனால் பல இடங்களில் மது பிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், மது வாங்கிச் செல்கின்றனர். இதனால் கொரோனா பரவ வாய்ப்புகள்இருப்பதாக பல தரப்பிலிருந்தும் கருத்து எழுந்து உள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைனில் மதுபான விற்பனையை நடத்த மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியது.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், இறுதிச் சடங்கிற்கு 20 பேருக்கு அனுமதி அளித்துள்ளனர். ஏனென்றால் ஆன்மா(spirit) உடலை விட்டு வெளியேறிவிட்டது. ஆனால், 1000 பேர் ஒரு மது கடையில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அங்கு தான் ஆன்மா (spirits) உள்ளன என பதிவிட்டு உள்ளார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…