பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் – இந்தியன் ஆயில் அதிகாரி!

Default Image

2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என்று இந்தியன் ஆயில் அதிகாரி எஸ்.எஸ்.வி.ராமகுமார் தகவல்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் வரும் 2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தை விலையை பொறுத்தே எரிவாயு சிலிண்டர் விலை விற்பனையாவதால், விலை மாறுதல் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ரூ.3200 கோடி செலவில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (ஆர்&டி) அமைக்கப்படும் என்றும் புதிய மையம் 2023க்குள் தயாராகிவிடும் எனவும் குறிப்பிட்ட அவர், இது ஐந்து சிறப்பான மையங்களைக் கொண்டிருக்கும் மற்றும் மொத்த R&D தலைமை எண்ணிக்கை இரட்டிப்பாக 1,000 ஆக இருக்கும் என தெரிவித்தார்.

எண்ணெய் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை ஒருங்கிணைந்த வளாகங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துவதாகவும், மாற்று எரிபொருட்களின் வளர்ச்சியுடன் முன்னோக்கி செல்லும்போது வேறுபட்ட பெட்ரோ கெமிக்கல்கள்  தயாரிக்கப்படுகின்றன. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் மேலும் ஆறு சுத்திகரிப்பு ஆலைகளுடன் தொழில்நுட்பத்திற்கான உரிமம் பெறுவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாக ராமகுமார் கூறினார்.

ஐஓசி தனது ஹைட்ரஜன் நுகர்வில் 10 சதவீதத்தை பசுமை ஹைட்ரஜனாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையம் 2024க்குள் பசுமையாக மாறும். பச்சை ஹைட்ரஜனை எத்தனால் ஆக மாற்ற முடியும் என்றும் விமானத்தை இயக்கும் எத்தனால் கொண்டு உயிரி எரிபொருள் தயாரிக்க ஒரு பைலட் ஆலையை அமைக்க ஐஓசி திட்டமிட்டுள்ளது எனவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையே, கடந்த 2014-ம் ஆண்டில் 1.5 சதவீத எத்தனால், பெட்ரோலுடன் சேர்க்கப்பட்டது. தற்போது 8.5% ஆக உள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 20% எத்தனால் பயன்பாட்டை முழுமையாக அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 முதல் 20% எத்தனால் கலக்கப்படும் என இந்தியன் ஆயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்