2 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. 2 பேர் கைது!

Published by
Surya

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஷாஹ்புரா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய வயலில் கடந்த மாதம், 18 ஆம் தேதி காயங்களுடன் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, அந்தப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தெரியவந்தது.

மேலும், அந்த சிறுமியின் தந்தை, சிறுமியை காணவில்லை என போலீசாரிடம் புகாரளித்ததாக தெரியவந்தது. சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சிறப்பு படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த சோனு கோண்ட் (21), சுபம் மல்லா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 376 (கற்பழிப்பு), 363 (கடத்தல்), 302 (கொலை), 201 (சான்றுகள் காணாமல் போகின்றன) போக்ஸோ மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜபல்பூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

2 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

2 hours ago

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…

2 hours ago

“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…

3 hours ago

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? முதலமைச்சர் – இபிஎஸ் காரசார வாதம்.!

சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…

4 hours ago

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்த வருண்..வருடாந்திர ஊதியம் இவ்வளவா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…

4 hours ago