2 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. 2 பேர் கைது!

Published by
Surya

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஷாஹ்புரா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய வயலில் கடந்த மாதம், 18 ஆம் தேதி காயங்களுடன் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, அந்தப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தெரியவந்தது.

மேலும், அந்த சிறுமியின் தந்தை, சிறுமியை காணவில்லை என போலீசாரிடம் புகாரளித்ததாக தெரியவந்தது. சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சிறப்பு படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் வேட்டை தீவிரமாக நடந்து வந்தது. அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த சோனு கோண்ட் (21), சுபம் மல்லா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது ஐபிசி பிரிவுகள் 376 (கற்பழிப்பு), 363 (கடத்தல்), 302 (கொலை), 201 (சான்றுகள் காணாமல் போகின்றன) போக்ஸோ மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜபல்பூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

50 seconds ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

1 hour ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

2 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

2 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

3 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

4 hours ago