தானேயில் ரயில்வே சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு ,4 பேர் காயம்

Default Image

தானேவின் டோம்பிவிலி ரயில் நிலைய வளாகத்தில் புதன்கிழமை சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரயில் நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க புதிய பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், திடீரென அருகில் இருந்த பழமையான சுவர் இடிந்து விழுந்தது. அவர்கள் 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை உடனடியாக வெளியேற்றினர், ஆனால் அவர்களால் 2 பேரை காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்