அசாமில் 6 ஆண்கள் சேர்ந்து 2 சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிபுராவை சேர்ந்த இரண்டு சகோதரிகள் வெள்ளிக்கிழமையன்று தனது தாயை சில்சாரில் உள்ள கேன்சர் மருத்துவமனையில் சந்தித்து விட்டு வாடகை காரில் திரும்பியுள்ளனர் . அப்போது கார் அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் பகுதியில் நுழைந்த போது , காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அந்த இரு பெண்களையும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே இருந்த 4 நபர்களும் இணைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .
அதனையடுத்து பெண்களிடமிருந்து பணம், மொபைல் மற்றும் நகை ஆகியவற்றை பறித்து கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் போலிசாருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து சனிக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் .
அதில் முதலில் பெண்களை ஏற்றி சென்ற காரில் டிரைவர் மட்டுமே இருந்ததாக கருதப்பட்ட நிலையில் அந்த காரில் மேலும் ஒருவர் உதவியுள்ளார் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது . தற்போது இந்த குற்றம் செய்த குற்றவாளிகளில் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் , மேலும் ஒருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கரீம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி)மயங்க் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…